இடைக்கால தடை உத்தரவு

Wednesday, 12 August 2020 - 15:36

%E0%AE%87%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2+%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88+%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81
குருநாகல் நகர முதல்வர் துஷார சஞ்ஜீவ விதாரன உள்ளிட்ட 5 பேருக்கு பிறப்பிக்கப்பட்ட பிடியாணையை எதிர்வரும் 24 ஆம் திகதி வரை அமுல்படுத்த வேண்டாம் என மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தவிட்டுள்ளது.

குருநாகல் புவனெகபாகு கட்டடம் சேதமாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் தம்மை கைது செய்யுமாறு பிறப்பிக்கப்பட்ட உத்தரவை வலுவிலக்க செய்யும் நீதி பேராணையை கோரி குருநாகல் நகர முதல்வர் மனு இன்று ஆராயப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் குருநாகல் நகர முதல்வர் உள்ளிட்ட 5 பேரை கைது செய்யுமாறு குருநாகல் நீதவான் நேற்று முன்தினம் மீண்டும் பிடியாணை உத்தரவை பிறப்பித்திருந்தமை குறிப்பிடதக்கது.