எவ்வாறான நிலைமைகளுக்கு மத்தியிலும், 2021 இல் டோக்கியோ ஒலிம்பிக் போட்டி நடத்தப்படும் என ஜப்பான் அறிவித்துள்ளது.
ஜப்பானின் ஒலிம்பிக் அமைச்சர் செய்கோ ஹஸிமோடோ ளுநமைழ ர்யளாiஅழவழ இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
ஜப்பானில் இந்த ஆண்டு நடைபெறவிருந்த டோக்கியோ ஒலிம்பிக் போட்டி, கொவிட்-19 தொற்று காரணமாக பிற்போடப்பட்ட நிலையில், அடுத்த ஆண்டு ஜுலை மாதம் 23 ஆம் திகதி முதல் ஓகஸ்ட் மாதம் 8 ஆம் திகதிவரை அதனை நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், சம்பந்தப்பட்ட அனைவரும் தயார் நிலைகளுக்காக ஒன்றிணைந்து செயல்படுவதாகவும், விளையாட்டு வீரர்களும் கணிசமான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றதாகவும் ஜப்பான் ஒலிம்பிக் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இதேநேரம், கொவிட்-19 தொற்று நிலைமையுடனோ அல்லது இல்லாமலோ ஒலிம்பிக் போட்டி நடைபெறும் என சர்வதேச ஒலிம்பிக் குழு நேற்று அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது