சாம்பியனானது றின்பெகோ நைட் றைடர்ஸ் அணி ..!

Friday, 11 September 2020 - 10:53

%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%95%E0%AF%8B+%E0%AE%A8%E0%AF%88%E0%AE%9F%E0%AF%8D+%E0%AE%B1%E0%AF%88%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D++%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF+..%21
சி.பி.எல் எனப்படும் கறீபியன் ப்றீமியர் லீக் தொடரில் கிரான் பொலாட் தலைமையிலான றின்பெகோ நைட் றைடர்ஸ்  அணி சாம்பியனானது.

டரேபாவில்  உள்ள ப்றெய்ன் லாரா மைதானத்தில், லூஸியாஸ் சொக்ஸ் அணிக்கும், றின்பெகோ நைட் றைடர்ஸ் அணிக்கும் இடையில் நேற்றைய தினம் இறுதிப் போட்டி இடம்பெற்றது.

போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய லூஸியா சொக்ஸ் அணி, 19.1 ஓவர்களில் 154 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுக்களையும் இழந்தது.

இதையடுத்து, 155 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலளித்தாடிய, றின்பெகோ நைட் றைடர்ஸ் அணி, 18.1 ஓவர்களில் 2 விக்கட்டுக்களை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை கடந்தது.

இந்த வெற்றியின் மூலம், கறீபியன் லீக் தொடரில் றின்பெகோ நைட் றைடர்ஸ் அணி, நான்கு முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.