பிரபல தென்னிந்திய பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் உடல் நிலை கடந்த 24 மணித்தியாலங்களில் அதி தீவிர நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர் சிகிச்சை பெற்று வரும் மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள் அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் எஸ்.பி பாலசுப்ரமணியத்தின் சுகநலன்களை கேட்;டறிவதற்காக தென்னிந்திய நடிகர் கமலஹாசன் நேற்றிரவு மருத்துவமனைக்கு சென்றிருந்ததாக இந்திய ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
74 வயதான எஸ்.பி.பாலசுப்ரமணியத்திற்கு கடந்த ஆகஸ்ட் மாதம் 5 ஆம் திகதி கொவிட்-19 தொற்றுறுதியானதை அடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதேவேளை இந்தியாவில் இதுவரையில் 57 லட்சத்து 32 ஆயிரத்து 518 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது.
அத்துடன் இதுவரையில் 91 ஆயிரத்து 149 பேர் உயிரிழந்துள்ளனர்.
எவ்வாறாயினும் இந்தியாவில் தொற்றுறுதியான 46 லட்சத்து 74 ஆயிரத்து 987 பேர் இதுவரையில் குணமடைந்துள்ளனர்.
அவர் சிகிச்சை பெற்று வரும் மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள் அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் எஸ்.பி பாலசுப்ரமணியத்தின் சுகநலன்களை கேட்;டறிவதற்காக தென்னிந்திய நடிகர் கமலஹாசன் நேற்றிரவு மருத்துவமனைக்கு சென்றிருந்ததாக இந்திய ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
74 வயதான எஸ்.பி.பாலசுப்ரமணியத்திற்கு கடந்த ஆகஸ்ட் மாதம் 5 ஆம் திகதி கொவிட்-19 தொற்றுறுதியானதை அடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதேவேளை இந்தியாவில் இதுவரையில் 57 லட்சத்து 32 ஆயிரத்து 518 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது.
அத்துடன் இதுவரையில் 91 ஆயிரத்து 149 பேர் உயிரிழந்துள்ளனர்.
எவ்வாறாயினும் இந்தியாவில் தொற்றுறுதியான 46 லட்சத்து 74 ஆயிரத்து 987 பேர் இதுவரையில் குணமடைந்துள்ளனர்.