ஸ்ரீ ஜயவர்தனபுர நாடாளுமன்ற வளாகத்தின் அனைத்து பகுதிகளுக்கும் பூட்டு..!

Monday, 26 October 2020 - 10:26

%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80+%E0%AE%9C%E0%AE%AF%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1+%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%A9%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81..%21
ஸ்ரீ ஜயவர்தனபுர நாடாளுமன்ற வளாகத்தின் அனைத்து பகுதிகளும் சேவையாளர்களுக்காக இன்றும் நாளையும் மூடப்பட்டுள்ளதாக பிரதி பொதுச் செயலாளர் நீல் இத்தவெல தெரிவித்துள்ளார்.

குறித்த காலப்பகுதியில் நாடாளுமன்ற வளாகத்தில் தொற்று நீக்கல் நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் அவர் அறிவித்துள்ளார்.

இதற்கமைய நாடாளுமன்ற சேவையாளர்களுக்காக எதிர்வரும் புதன்கிழமை மீண்டும் குறித்த பகுதிகள் திறக்கப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.