அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெற்ற ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடனுக்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தமது உத்தியோகபூர்வ ட்விட்டர் தளத்தில் நரேந்திர மோடி இதனைத் தெரிவித்துள்ளார்.
ஜோ பைடனுடனான தொலைபேசி உரையாடலில், இந்தோ-அமெரிக்க மூலோபாய கூட்டாண்மைக்கான தங்களது உறுதியான உறுதிப்பாட்டை தாம் மீண்டும் வலியுறுத்தியதாக நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளார்.
முன்னுரிமை பிரச்சினைகளான, கொவிட்-19 தொற்று பரவல், காலநிலை மாற்றம் மற்றும் இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் ஒத்துழைப்பு என்பன குறித்தும் தாங்கள் கலந்துரையாடியதாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
இதேநேரம், துணை ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டுள்ள கமலா தேவி ஹாரிசஸுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்ததாக அவர் கூறியுள்ளார்.
கமலா தேவி ஹாரிஸின் வெற்றி துடிப்பான இந்திய-அமெரிக்க வம்சாவளி உறுப்பினர்களுக்கு மிகுந்த பெருமையையும் உத்வேகத்தையும் அளிப்பதாக அவர் தெரிவிததுள்ளார்.
தமது உத்தியோகபூர்வ ட்விட்டர் தளத்தில் நரேந்திர மோடி இதனைத் தெரிவித்துள்ளார்.
ஜோ பைடனுடனான தொலைபேசி உரையாடலில், இந்தோ-அமெரிக்க மூலோபாய கூட்டாண்மைக்கான தங்களது உறுதியான உறுதிப்பாட்டை தாம் மீண்டும் வலியுறுத்தியதாக நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளார்.
முன்னுரிமை பிரச்சினைகளான, கொவிட்-19 தொற்று பரவல், காலநிலை மாற்றம் மற்றும் இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் ஒத்துழைப்பு என்பன குறித்தும் தாங்கள் கலந்துரையாடியதாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
இதேநேரம், துணை ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டுள்ள கமலா தேவி ஹாரிசஸுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்ததாக அவர் கூறியுள்ளார்.
கமலா தேவி ஹாரிஸின் வெற்றி துடிப்பான இந்திய-அமெரிக்க வம்சாவளி உறுப்பினர்களுக்கு மிகுந்த பெருமையையும் உத்வேகத்தையும் அளிப்பதாக அவர் தெரிவிததுள்ளார்.