வீதி சமிக்ஞை விளக்குகளுக்கு அருகில் யாசகம் பெற்ற மற்றும் பணத்தினை வழங்கிய சாரதிகள் உள்ளிட்ட 30 பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக காவல்துறை தலைமையகம் தெரிவித்துள்ளது.
காவல்துறை ஊடகப் பேச்சாளர் பிரதி காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹண இதனை தெரிவித்துள்ளார்.
சாரதிகளுக்கு மேலதிகமாக வாகனங்களின் பயணித்த சிலரும் அதில் அடங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் வீதி சமிக்ஞை விளக்குகளுக்கு அருகில் யாசகம் பெறும் மற்றும் பொருட்களை விற்பனை செய்பவர்களுக்கு எதிராக எதிர்வரும் நட்களில் சட்டநடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை அம்பலாங்கொடை பகுதியில் இரண்டு பாடசாலை மாணவர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட பீ சீ ஆர் பரிசோதனைகளில் அவர்களுக்கு கொரோனா இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
காவல்துறை ஊடகப் பேச்சாளர் பிரதி காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹண இதனை தெரிவித்துள்ளார்.
சாரதிகளுக்கு மேலதிகமாக வாகனங்களின் பயணித்த சிலரும் அதில் அடங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் வீதி சமிக்ஞை விளக்குகளுக்கு அருகில் யாசகம் பெறும் மற்றும் பொருட்களை விற்பனை செய்பவர்களுக்கு எதிராக எதிர்வரும் நட்களில் சட்டநடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை அம்பலாங்கொடை பகுதியில் இரண்டு பாடசாலை மாணவர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட பீ சீ ஆர் பரிசோதனைகளில் அவர்களுக்கு கொரோனா இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.