பணிக்கு திரும்புமாறு அஞ்சல் உத்தியோகத்தர்களுக்கு அழைப்பு..!

Friday, 27 November 2020 - 15:10

%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%85%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%85%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81..%21
தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்ட பகுதிகளை தவிர்த்த ஏனைய பிரதேசங்களில் வசிக்கும் மத்திய அஞ்சல் பரிவர்த்தனை நிலையத்தின் உத்தியோகத்தர்களை உடனடியாக பணிக்கு திரும்புமாறு அஞ்சல்  மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன தெரிவித்தார்.

மத்திய அஞ்சல் பரிவர்த்தனை நிலையத்தின் செயற்பாடுகள் முழுமையாக சுகாதார நிபந்தனைகளுக்கு அமைய மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அஞ்சல் மா அதிபர் குறிப்பிட்டுள்ளார்

இதற்கமைய மத்திய அஞ்சல் பரிவர்த்தனை நிலையத்தின் உத்தியோகத்தர்கள் தங்களது பிரிவின் உதவி அதிகாரிகளுடன் தொடர்புகளை ஏற்படுத்தி விதிக்கப்பட்டுள்ள நிபந்தனைகளுக்கமைய பணிக்கு திரும்புமாறு அஞ்சல் மா அதிபர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.