தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் 66வது பிறந்ததினத்தையிட்டு அவரின் புகைப்படத்தை முகநூலில் பதிவேற்றி பிறந்ததின வாழ்த்து தெரிவித்தமைக்காக கைது செய்யப்பட்ட 4 பேரின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் இவ்வாறு உத்தரவு பிறப்பித்துள்ளது.
செங்கலடி, சித்தாண்டி, மொறக்கொட்டாஞ்சேனை பிரதேசங்களைச் சோர்ந்த 4 பேர் கடந்த வியாழக்கிழமை, ஏறாவூர் காவற்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.
இன்று அவர்கள் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.
இதன்போது அவர்களை எதிர்வரும் டிசம்பர் மாதம் 11 திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு பதில் நீதவான் உத்தரவிட்டார்.
மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் இவ்வாறு உத்தரவு பிறப்பித்துள்ளது.
செங்கலடி, சித்தாண்டி, மொறக்கொட்டாஞ்சேனை பிரதேசங்களைச் சோர்ந்த 4 பேர் கடந்த வியாழக்கிழமை, ஏறாவூர் காவற்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.
இன்று அவர்கள் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.
இதன்போது அவர்களை எதிர்வரும் டிசம்பர் மாதம் 11 திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு பதில் நீதவான் உத்தரவிட்டார்.