பிரித்தானியாவில் இருந்து இலங்கைக்கு வந்த நிலையில், கொவிட்-19 தொற்றுறுதியான ஒருவருக்கு, பிரித்தானியாவில் கண்டறியப்பட்டுள்ள புதிய உருமாறிய வைரஸ் தொற்றியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
தொற்று நோய் விஞ்ஞான பிரிவின் விசேட வைத்தியர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.
ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் நீலிகா மலவிகே உள்ளிட்ட குழுவினரால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் இந்த விடயம் கண்டறியப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
நாட்டில் கொவிட்-19 தொற்றினால் பீடிக்கப்பட்டுள்ளவர்களுக்கு தொற்றியுள்ள வைரஸ் தொடர்பில் பேராசிரியர் நீலிகா மலவிகே உள்ளிட்ட குழுவினர் தொடர்ச்சியாக ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதன்படி, அண்மையில் வெளிநாடுகளில் இருந்து நாட்டுக்கு வந்தவர்கள் தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்படுகிறது.
இந்த நிலையில், பிரித்தானியாவில் இருந்து வந்த ஒருவருக்கு தொற்றியுள்ள வைரஸ், பிர்த்தானியாவில் அடையாளம் காணப்பட்டுள்ள புதிய வைரஸ் என கண்டறியப்பட்டுள்ளது.
இது மிகவும் முக்கியத்துவமிக்க கண்டுபிடிப்பாகும்.
ஏனெனில், இந்த வைரஸின் அபாயம் நாட்டுக்குள் இருப்பதனால், அது நாட்டுக்குள் பரவுவதற்கான சந்தர்ப்பத்தை குறைப்பதற்காக உச்சப்பட்ட முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என விசேட வைத்தியர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.
இதற்கமைய, தனிமைப்படுத்தல் நடைமுறைகளை மிகவும் கடுமையாகவும், அவதானத்துடனும் மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.
தொற்று நோய் விஞ்ஞான பிரிவின் விசேட வைத்தியர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.
ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் நீலிகா மலவிகே உள்ளிட்ட குழுவினரால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் இந்த விடயம் கண்டறியப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
நாட்டில் கொவிட்-19 தொற்றினால் பீடிக்கப்பட்டுள்ளவர்களுக்கு தொற்றியுள்ள வைரஸ் தொடர்பில் பேராசிரியர் நீலிகா மலவிகே உள்ளிட்ட குழுவினர் தொடர்ச்சியாக ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதன்படி, அண்மையில் வெளிநாடுகளில் இருந்து நாட்டுக்கு வந்தவர்கள் தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்படுகிறது.
இந்த நிலையில், பிரித்தானியாவில் இருந்து வந்த ஒருவருக்கு தொற்றியுள்ள வைரஸ், பிர்த்தானியாவில் அடையாளம் காணப்பட்டுள்ள புதிய வைரஸ் என கண்டறியப்பட்டுள்ளது.
இது மிகவும் முக்கியத்துவமிக்க கண்டுபிடிப்பாகும்.
ஏனெனில், இந்த வைரஸின் அபாயம் நாட்டுக்குள் இருப்பதனால், அது நாட்டுக்குள் பரவுவதற்கான சந்தர்ப்பத்தை குறைப்பதற்காக உச்சப்பட்ட முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என விசேட வைத்தியர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.
இதற்கமைய, தனிமைப்படுத்தல் நடைமுறைகளை மிகவும் கடுமையாகவும், அவதானத்துடனும் மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.