இவ்வாண்டு இறுதியில் வாகன இறக்குமதியை மீண்டும் தொடங்குவது குறித்து பரிசீலிக்கப்படும் என இராஜாங்க நிதி அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்தார்.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நாடாளுமன்றத்தில் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போது இராஜாங்க அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
அரசினால் வாகனங்களை இறக்குமதி செய்வதை நிறுத்தியமையானது தற்காலிகமான ஒரு நடவடிக்கை என அமைச்சர் தெளிவுபடுத்தினார்.
அத்தோடு வாகனங்களின் இறக்குமதி அந்நிய செலாவணி வீதங்களின் ஸ்திரத்தன்மைக்கு அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் அமைச்சர் கூறினார்.
இதேவேளை வாகன இறக்குமதியாளர்களுக்கு சலுகையொன்றை வழங்குவதன் பொருட்டு ஏற்றுமதி கட்டுப்பாட்டாளர்களினால் துறைமுகங்களுக்கு வரும் வாகனங்களை பல சந்தர்ப்பங்களில் விடுவிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளதாக இராஜாங்க நிதி அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்தார்.
வாகனங்கள் உள்ளிட்ட அத்தியாவசியமற்ற பொருட்களை இறக்குமதி செய்வதற்கான தற்காலிக தடை எதிர்காலத்தில் நாணய மாற்று விகிதத்தின் ஸ்திரத்தன்மையின் அடிப்படையில் முடிவு செய்யப்படும் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
இதேவேளை மத்திய வங்கி ரூ. 48 பில்லியன் மேலதிக பணம் அச்சிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
நிதித் திரவத்தன்மையை பேணுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் எமது செய்தி பிரிவிடம் தெரிவித்தார்.
தற்போதைய சூழ்நிலையில் அத்தகைய நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் பொருளாதார நெருக்கடிகளை தடுக்க முடியாது என்று அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நாடாளுமன்றத்தில் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போது இராஜாங்க அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
அரசினால் வாகனங்களை இறக்குமதி செய்வதை நிறுத்தியமையானது தற்காலிகமான ஒரு நடவடிக்கை என அமைச்சர் தெளிவுபடுத்தினார்.
அத்தோடு வாகனங்களின் இறக்குமதி அந்நிய செலாவணி வீதங்களின் ஸ்திரத்தன்மைக்கு அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் அமைச்சர் கூறினார்.
இதேவேளை வாகன இறக்குமதியாளர்களுக்கு சலுகையொன்றை வழங்குவதன் பொருட்டு ஏற்றுமதி கட்டுப்பாட்டாளர்களினால் துறைமுகங்களுக்கு வரும் வாகனங்களை பல சந்தர்ப்பங்களில் விடுவிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளதாக இராஜாங்க நிதி அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்தார்.
வாகனங்கள் உள்ளிட்ட அத்தியாவசியமற்ற பொருட்களை இறக்குமதி செய்வதற்கான தற்காலிக தடை எதிர்காலத்தில் நாணய மாற்று விகிதத்தின் ஸ்திரத்தன்மையின் அடிப்படையில் முடிவு செய்யப்படும் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
இதேவேளை மத்திய வங்கி ரூ. 48 பில்லியன் மேலதிக பணம் அச்சிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
நிதித் திரவத்தன்மையை பேணுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் எமது செய்தி பிரிவிடம் தெரிவித்தார்.
தற்போதைய சூழ்நிலையில் அத்தகைய நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் பொருளாதார நெருக்கடிகளை தடுக்க முடியாது என்று அமைச்சர் சுட்டிக்காட்டினார்.