பையில் கட்டி வீசப்பட்டிருந்த கைக்குழந்தை உயிருடன் மீட்பு!

Wednesday, 24 February 2021 - 11:20

%E0%AE%AA%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF+%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88+%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%21

தமிழ்நாட்டின் திருச்சி விமான நிலையத்துக்கு அருகில் காவேரிநகர் பகுதியில் நேற்றுக் காலை கைக்குழந்தையொன்று மீட்கப்பட்டுள்ளது.

குழந்தையின் அழுகுரலொன்று கேட்பதாக திருச்சி விமான நிலைய காவல்துறையினருக்கு பொதுமக்கள் தகவல் கொடுத்துள்ளனர்.

அதன்படி விமான நிலைய காவல்துறை அதிகாரி ஒருவர் சம்பவ இடத்துக்கு விரைந்தார். அதன்போது, அங்கு இருந்த ஒரு பையை எடுத்து பிரித்து பார்த்த போது, அதில் பிறந்து சில மணி நேரமே ஆன பச்சிளம் பெண் குழந்தையொன்று இருந்துள்ளது.

அதன்பின்னரான விசாரணையில், அந்த குழந்தை 7 மாத குறைபிரசவத்தில் பிறந்தது என்றும், அதனால் அந்த குழந்தையை அதன் தாய் பையில் வைத்து வீசிச் சென்றதும் தெரிய வந்தது.

பின்னர், அந்த குழந்தையை அருகில் உள்ள தனியார் வைத்தியசாலைக்கு எடுத்துச்சென்று சிகிச்சை அளித்ததுடன் மேலதிக சிகிச்சைக்காக திருச்சி வைத்தியசாலையில் அந்த குழந்தை அனுமதிக்கப்பட்டது.

மேலும் இதுகுறித்து திருச்சி விமான நிலைய காவல்துறையினர் விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.