அமெரிக்காவில் இருந்து வந்து ஏ.ஆர்.ரஹ்மானின் இசை கல்லுரியில் படித்துவருபவர் அகிலா நாராயணன்.
கடந்த வியாழக்கிழமை வெளியான காதம்பரி படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாகியுள்ளார்.
இசையில் ஆர்வம் இருந்தாலும் நடிப்பிலும் ஆர்வம் அதிகம் என்பதால் கல்லூரி நாடகங்களில் நடித்துவிட்டு சினிமாவுக்குள் வந்திருக்கிறார்.
இதுகுறித்து அவர் கூறுகையில் இசையும்,நடிப்பும் என் இரு கண்கள். இசை கற்றுக் கொண்டே நடிக்கவும் செய்கிறேன். தனி இசை ஆல்பங்களையும் வெளியிட்டு வருகிறேன்.
இசைக்கென்று ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனம் தொடங்கும் திட்டமும் இருக்கிறது.
4 வயதிலிருந்தே இசை பயின்று வருகிறேன். பல அழகிப் போட்டிகளிலும் வெற்றிபெற்றிருக்கிறேன்.
இந்த இரண்டும் தான் என்னை இசை மீதும், நடிப்பின் மீதும் நம்பிக்கை கொள்ள வைத்தது.
ரஹ்மானின் கல்லுரியில் தற்போது மேற்கத்தேய இசை பயிற்சி பெற்று வருகிறேன்.
2 முதல் 10 வயது வரையிலான குழந்தைகளுக்கு இசை பயிற்சியும் அளித்து வருகிறேன்.விளம்பர மொடலாகவும் பணியாற்றி வருகிறேன்.
இசை மற்றும் நடிப்பில் சாதிக்க வேண்டும் என்கிற லட்சியத்தோடு அமெரிக்காவில் இருந்து சென்னை வந்திருக்கிறேன்என அகிலாதெரிவிக்கிறார்.