தனது நடிப்பால் ரசிகர்களுக்கு மீண்டும் விருந்துபடைக்க தயாராகிவருகிறார் வைகைப்புயல் வடிவேலு.
அவர் தற்போது புதிய திரைப்படம் ஒன்றில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளதாக உத்தியோகபூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளன.
நீண்டகாலமாக திரைப்படங்களில் நடிப்பதிலிருந்து விலகியிருந்த வைகைப்புயல் வடிவேலு தற்போது இயக்குநர் சுராஜ் இயக்கத்தில் தயாராகிவரும் படம் ஒன்றில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இத்திரைப்படத்துக்கு 'நாய் சேகர்' எனப் பெயரிடப்பட்டுள்ள நிலையில் படத்தின் படப்பிடிப்புக்கள் ஏப்ரலில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே, இயக்குநர் சுராஜ் இயக்கத்தில் வெளியான மருதமலை மற்றும் தலைநகரம் ஆகிய படங்களில் வடிவேலு நடித்துள்ள நிலையில் அதில் அவர் நடித்த நகைச்சுவை காட்சிகள் இன்றும் கூட அனைவரையும் சிரிக்க வைக்கும்படியாக உள்ளன.
அவர் தற்போது புதிய திரைப்படம் ஒன்றில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளதாக உத்தியோகபூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளன.
நீண்டகாலமாக திரைப்படங்களில் நடிப்பதிலிருந்து விலகியிருந்த வைகைப்புயல் வடிவேலு தற்போது இயக்குநர் சுராஜ் இயக்கத்தில் தயாராகிவரும் படம் ஒன்றில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இத்திரைப்படத்துக்கு 'நாய் சேகர்' எனப் பெயரிடப்பட்டுள்ள நிலையில் படத்தின் படப்பிடிப்புக்கள் ஏப்ரலில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே, இயக்குநர் சுராஜ் இயக்கத்தில் வெளியான மருதமலை மற்றும் தலைநகரம் ஆகிய படங்களில் வடிவேலு நடித்துள்ள நிலையில் அதில் அவர் நடித்த நகைச்சுவை காட்சிகள் இன்றும் கூட அனைவரையும் சிரிக்க வைக்கும்படியாக உள்ளன.