இலங்கையில் முதலீடு செய்வதற்காக வியட்னாம் வர்த்தகர்களை ஊக்கப்படுத்துவதாகவும், வர்த்தக, சுற்றுலா துறைகளின் அபிவிருத்திக்கு உயர் முக்கியத்துவம் வழங்குவதாகவும் இலங்கைக்கான வியட்னாம் தூதுவர் உறுதியளித்துள்ளார்.
இலங்கைக்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள வியட்னாம் நாட்டின் தூதுவர் ஹோ தீ தான் ரக் நேற்று ஜனாதிபதி மாளிகையில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் தமது நியமனக் கடிதத்தை கையளித்தார்.
இதன்போதே அவர் குறித்த விடயத்தை தெரிவித்ததாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.
இலங்கையில் காணப்படுகின்ற பொருளாதார முதலீட்டு வாய்ப்புகளை இனங்கண்டு அதன் மூலம் பயனடையுமாறு வியட்னாம் தூதுவரிடம் ஜனாதிபதி இதன்போது கேட்டுக்கொண்டுள்ளார்.
அத்துடன், இரு நாடுகளுக்கிடையிலான வர்த்தக, சுற்றுலா துறையை மேலும் அபிவிருத்தி செய்வதற்கு முடியுமென்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கைக்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள வியட்னாம் நாட்டின் தூதுவர் ஹோ தீ தான் ரக் நேற்று ஜனாதிபதி மாளிகையில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் தமது நியமனக் கடிதத்தை கையளித்தார்.
இதன்போதே அவர் குறித்த விடயத்தை தெரிவித்ததாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.
இலங்கையில் காணப்படுகின்ற பொருளாதார முதலீட்டு வாய்ப்புகளை இனங்கண்டு அதன் மூலம் பயனடையுமாறு வியட்னாம் தூதுவரிடம் ஜனாதிபதி இதன்போது கேட்டுக்கொண்டுள்ளார்.
அத்துடன், இரு நாடுகளுக்கிடையிலான வர்த்தக, சுற்றுலா துறையை மேலும் அபிவிருத்தி செய்வதற்கு முடியுமென்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.