14ஆவது இந்தியன் பிரீமியர் லீக் தொடர் இன்று சென்னையில் ஆரம்பமாகவுள்ளது.
இந்த போட்டித் தொடர் எதிர்வரும் மே மாதம் 30ஆம் திகதி வரையில் இடம்பெறவுள்ளது.
சென்னை, பெங்களுர், மும்பை, அஹமதாபாத், கொல்கத்தா, டெல்லி ஆகிய நகரங்களில் உள்ள மைதானங்களில் இந்த போட்டிகள் இடம்பெறவுள்ளன.
இன்றைய முதலாவது போட்டியில் நடப்பு செம்பியனான மும்பை இந்தியன்ஸ் மற்றும் பெங்களூர் ரோயல் செலன்ஜர்ஸ் ஆகிய அணிகள் மோதிக்கொள்ளவுள்ளன.
வழக்கமாக ஒவ்வொரு அணிக்கும் உள்ளூர் மைதானங்களில் 7 லீக் ஆட்டங்கள் நடத்தப்படும்.
எனினும் இந்த முறை முதல்முறையாக இந்த சீசனில் எந்த அணிக்கும் தங்களது சொந்த ஊரில் போட்டிகள் கிடையாது.
அத்துடன் கொவிட் பரவல் காரணமாக பார்வையாளர்கள் இன்றி போட்டிகள் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த போட்டித் தொடர் எதிர்வரும் மே மாதம் 30ஆம் திகதி வரையில் இடம்பெறவுள்ளது.
சென்னை, பெங்களுர், மும்பை, அஹமதாபாத், கொல்கத்தா, டெல்லி ஆகிய நகரங்களில் உள்ள மைதானங்களில் இந்த போட்டிகள் இடம்பெறவுள்ளன.
இன்றைய முதலாவது போட்டியில் நடப்பு செம்பியனான மும்பை இந்தியன்ஸ் மற்றும் பெங்களூர் ரோயல் செலன்ஜர்ஸ் ஆகிய அணிகள் மோதிக்கொள்ளவுள்ளன.
வழக்கமாக ஒவ்வொரு அணிக்கும் உள்ளூர் மைதானங்களில் 7 லீக் ஆட்டங்கள் நடத்தப்படும்.
எனினும் இந்த முறை முதல்முறையாக இந்த சீசனில் எந்த அணிக்கும் தங்களது சொந்த ஊரில் போட்டிகள் கிடையாது.
அத்துடன் கொவிட் பரவல் காரணமாக பார்வையாளர்கள் இன்றி போட்டிகள் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.