நடிகர் விவேக் நினைவாக பாலாற்றுப்படுக்கை என்ற இடத்தில் 500 மரக்கன்றுகள் நடப்பட்டது!

Sunday, 18 April 2021 - 15:30

%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%87%E0%AE%95%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95+%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88+%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1+%E0%AE%87%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+500+%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%81%21
தமிழ் சினிமாவின் முன்னணி நகைச்சுவை நடிகர் 'விவேக்' நேற்று காலமானார்.

மாரடைப்பு காரணமாக நேற்று முன்தினம் சென்னை - வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் நடிகர் விவேக்.

இவருக்கான சிகிச்சைகள் தொடர்ந்தும் வழங்கப்பட்டு வந்த நிலையில் நேற்று காலை அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக இந்திய ஊடகங்கள் தெரிவித்தன.

அவரது மறைவிற்கு ரசிகர்கள், திரை பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் கண்ணீர்மல்க அஞ்சலி செலுத்தினர்.

இந்நிலையில் நடிகர் விவேக்கின் நினைவாக பாலாற்றுப்படுக்கை என்ற இடத்தில் 500 மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நடிகர் விவேக் நடிப்பின் மூலம் சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தியவர்.

திரை உலகைத் தாண்டி பொது வாழ்க்கையிலும் அவர் தன்னை சமூக விழிப்புணர்வு செயற்பாடுகளுக்காக ஈடுபடுத்திக் கொண்டார்.

இந்தியாவில் ஒரு கோடி மரக்கன்றுகளை நட வேண்டும் என்ற கனவுடன் இருந்தவர் நடிகர் விவேக்.

ஆனால் அவரால் 3,300,000 மரக்கன்றுகளை மாத்திரமே நட முடிந்தது.

இந்நிலையில், அவரது நினைவாக பாலாற்றுப்படுக்கை என்ற இடத்தில் 500 மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.