யாழ்ப்பாணத்தில் மேலும் 7 பேருக்கு இன்றைய தினம் கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளதாக வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், வைத்தியர் ஆறுமுகம் கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஆய்வு கூடத்தில் 350 பேரின் மாதிரிகள் இன்று பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன.
அவர்களில் 7 பேருக்கே இவ்வாறு தொற்றுறுதியாகியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
யாழ்ப்பாணம் மாநகர சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் 6 பேருக்கு தொற்றுறுதியாகியுள்ளது.
அவர்களில் இருவர் சுயதனிமைப்படுத்தலில் இருந்தவர்களுடன், ஏனைய நால்வரும் யாழ்ப்பாணம் காவல்நிலையத்தின் உத்தியோகத்தர்கள் என அவர் தெரிவித்தார்.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் சேர்க்கப்பட்டிருந்த ஒருவரும் கொவிட்-19 தொற்றால் பீடிக்கப்பட்டுள்ளதாக வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், குறிப்பிட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஆய்வு கூடத்தில் 350 பேரின் மாதிரிகள் இன்று பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன.
அவர்களில் 7 பேருக்கே இவ்வாறு தொற்றுறுதியாகியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
யாழ்ப்பாணம் மாநகர சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் 6 பேருக்கு தொற்றுறுதியாகியுள்ளது.
அவர்களில் இருவர் சுயதனிமைப்படுத்தலில் இருந்தவர்களுடன், ஏனைய நால்வரும் யாழ்ப்பாணம் காவல்நிலையத்தின் உத்தியோகத்தர்கள் என அவர் தெரிவித்தார்.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் சேர்க்கப்பட்டிருந்த ஒருவரும் கொவிட்-19 தொற்றால் பீடிக்கப்பட்டுள்ளதாக வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், குறிப்பிட்டுள்ளார்.