யாழ்ப்பாணத்தில் மேலும் 7 பேருக்கு கொரோனா தொற்றுறுதி!

Monday, 19 April 2021 - 21:08

%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+7+%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%21
யாழ்ப்பாணத்தில் மேலும் 7 பேருக்கு இன்றைய தினம் கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளதாக வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், வைத்தியர் ஆறுமுகம் கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஆய்வு கூடத்தில் 350 பேரின் மாதிரிகள் இன்று பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன.

அவர்களில் 7 பேருக்கே இவ்வாறு தொற்றுறுதியாகியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

யாழ்ப்பாணம் மாநகர சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் 6 பேருக்கு தொற்றுறுதியாகியுள்ளது.

அவர்களில் இருவர் சுயதனிமைப்படுத்தலில் இருந்தவர்களுடன், ஏனைய நால்வரும் யாழ்ப்பாணம் காவல்நிலையத்தின் உத்தியோகத்தர்கள் என அவர் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் சேர்க்கப்பட்டிருந்த ஒருவரும் கொவிட்-19 தொற்றால் பீடிக்கப்பட்டுள்ளதாக வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், குறிப்பிட்டுள்ளார்.