யாழில் உழவு இயந்திரத்தின் மீது இராணுவத்தினர் துப்பாக்கிப் பிரயோகம்

Thursday, 22 April 2021 - 7:27

%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%89%E0%AE%B4%E0%AE%B5%E0%AF%81+%E0%AE%87%E0%AE%AF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D
யாழ்ப்பாணம் - கொடிகாமம் பகுதியில் இராணுவத்தினரின் கட்டளையை மீறிப் பயணித்த உழவு இயந்திரம் மீது துப்பாக்கிப் பிரயோகம் நடத்தப்பட்டுள்ளது.

சட்டவிரோத மணல் கடத்தலில் ஈடுபட்ட உழவு இயந்திரம் மீதே இவ்வாறு துப்பாக்கிப் பிரயோகம் நடத்தப்பட்டதாக இராணுவ பேச்சாளர் குறிப்பிட்டார்.

இதன்போது குறித்த உழவு இயந்திரத்தில் பயணித்த மூவர் தப்பியோடியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த பகுதியில் பாதுகாப்பில் ஈடுபட்டிருந்த இராணுவத்தினர், உழவு இயத்திரத்தை நிறுத்திய நிலையில் இராணுவத்தினரை மோதித் தள்ள முற்பட்ட போது உழவியந்திரத்தின் சக்கரங்களுக்கு துப்பாக்கி பிரயோகம் நடத்தப்பட்டுள்ளது.

உழவு இயந்திரத்தை கொடிகாமம் காவல்துறையினர் கைப்பற்றியுள்ளதோடு மேலதிக விசாரணைகளும் முன்னெடுக்கப்படுகின்றன.