இந்தியாவிலிருந்து வருகைதரும் பயணிகளுக்கு இலங்கையில் தரையிறங்க அனுமதியளிக்கபடமாட்டாது என சிவில் விமான சேவைகள் அதிகாரசபை தெரிவித்துள்ளது.
கொவிட் பரவல் நிலைமையை கவனத்திற் கொண்டு உடன் அமுலாகும் வகையில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அதிகாரசபை மேலும் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கொவிட்-19 பரவல் அதிகரித்துள்ளமையால், விமானம் மற்றும் மீன்பிடிப் படகுகள் மூலம் இந்தியப் பிரஜைகள் இலங்கைக்கு வருவதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இந்தியாவிலிருந்து வரும் பயணிகள், இலங்கையில் தரையிறங்க அனுமதியளிக்கப்பட மாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, கடல் மார்க்கமாக இந்தியாவிலிருந்து சட்டவிரோதமாக பிரவேசிப்பவர்களைத் தடுப்பதற்கு, கடல் எல்லையில் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
கொவிட் பரவல் நிலைமையை கவனத்திற் கொண்டு உடன் அமுலாகும் வகையில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அதிகாரசபை மேலும் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கொவிட்-19 பரவல் அதிகரித்துள்ளமையால், விமானம் மற்றும் மீன்பிடிப் படகுகள் மூலம் இந்தியப் பிரஜைகள் இலங்கைக்கு வருவதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இந்தியாவிலிருந்து வரும் பயணிகள், இலங்கையில் தரையிறங்க அனுமதியளிக்கப்பட மாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, கடல் மார்க்கமாக இந்தியாவிலிருந்து சட்டவிரோதமாக பிரவேசிப்பவர்களைத் தடுப்பதற்கு, கடல் எல்லையில் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.