பொதுமக்களை தவறாக வழிநடத்தும் வகையில் பரிசோதனைக்கு உட்படுத்தப்படாத மற்றும் அங்கீகாரம் வழங்கப்படாத மருந்துகளை கொவிட் 19 தொற்றுக்கு மருந்தாக உபயோகிக்குமாறு அறிவுறுத்துபவர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கவுள்ளதாக ஆயுர்வேத வைத்திய சபை தெரிவித்துள்ளது.
அதன் தலைவர் பதில் ஆயுர்வேத ஆணையாளர் நாயகம், தாரகா மேதாவி திஸாநாயக்க அறிக்கை ஒன்றை வெளியிட்டு இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
கொரோனா வைரஸை குணப்படுத்துவது தொடர்பில் உறுதியாக அடையாளம் காணப்படாத ஒளடதங்களை சமூகவலைத்தளங்கள் ஊடாக விளம்பரப்படுத்தி பொது மக்களை ஏமாற்றும் நடவடிக்கையினை தடுப்பதற்காக ஆயுர்வேத வைத்திய சபை அவதானம் செலுத்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அதன் தலைவர் பதில் ஆயுர்வேத ஆணையாளர் நாயகம், தாரகா மேதாவி திஸாநாயக்க அறிக்கை ஒன்றை வெளியிட்டு இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
கொரோனா வைரஸை குணப்படுத்துவது தொடர்பில் உறுதியாக அடையாளம் காணப்படாத ஒளடதங்களை சமூகவலைத்தளங்கள் ஊடாக விளம்பரப்படுத்தி பொது மக்களை ஏமாற்றும் நடவடிக்கையினை தடுப்பதற்காக ஆயுர்வேத வைத்திய சபை அவதானம் செலுத்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.