இலங்கையில் நீர் வழங்கல், சுகாதார சேவை மற்றும் தொற்று நீக்கல் செயற்பாடுகளுக்காக 40 மில்லியன் அமெரிக்க டொலரை நிதியாக வழங்க உலக வங்கியின் நிறைவேற்று பணிப்பாளர்கள் குழு அனுமதியளித்துள்ளது.
இந்த திட்டம் 7 மாவட்டங்களில் அமுல்படுத்தப்படவுள்ளது.
மேல், தென் மற்றும் வடமேல் மாகாணத்தில் உள்ள மக்கள் இதனூடாக நன்மையடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்த நிதியுதவியானது 'அனைவருக்கும் நீர்' என்ற அரசாங்கத்தின் திட்டத்திற்கு உதவியளிக்கும் என தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கையில் கொவிட்-19 தொற்று பரவல் நிலையில் ஆரோக்கியமான தேசத்தை உறுதிப்படுத்த பாதுகாப்பான நீர் வழங்கல் மற்றும் சுகாதார அமைப்புக்களை உருவாக்குவது முக்கியமானதென இலங்கைக்கான உலக வங்கியின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
இந்த திட்டம் 7 மாவட்டங்களில் அமுல்படுத்தப்படவுள்ளது.
மேல், தென் மற்றும் வடமேல் மாகாணத்தில் உள்ள மக்கள் இதனூடாக நன்மையடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்த நிதியுதவியானது 'அனைவருக்கும் நீர்' என்ற அரசாங்கத்தின் திட்டத்திற்கு உதவியளிக்கும் என தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கையில் கொவிட்-19 தொற்று பரவல் நிலையில் ஆரோக்கியமான தேசத்தை உறுதிப்படுத்த பாதுகாப்பான நீர் வழங்கல் மற்றும் சுகாதார அமைப்புக்களை உருவாக்குவது முக்கியமானதென இலங்கைக்கான உலக வங்கியின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.