மியன்மாரில் இராணுவ ஆட்சிக்கு எதிராக நடைபெற்றுவரும் போராட்டத்தை ஒடுக்கும் நடவடிக்கையில் இராணுவம் மேற்கொண்ட துப்பாக்கிச்சூட்டில் இதுவரை 1,058 பேர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மியன்மாரில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற பொதுத்தேர்தலில் முறைகேடு நடைபெற்றதாக தெரிவித்து கடந்த பெப்ரவரி மாதம் முதலாம் திகதி ஆட்சியை கைப்பற்றிய இராணுவம், நாட்டின் தலைவர் ஆங் சான் சூகி உள்ளிட்ட முக்கிய தலைவர்களை கைது செய்து சிறை வைத்தது.
இதனை தொடர்ந்து இராணுவ ஆட்சிக்கு எதிராக அங்கு மாபெரும் போராட்டம் வெடித்தது. நாட்டில் ஜனநாயகத்தை மீட்டெடுக்க கோரியும், சிறை வைக்கப்பட்டுள்ள அரசியல் தலைவர்களை உடனடியாக விடுவிக்க வலியுறுத்தியும் பல்லாயிரக்கணக்கான மக்கள் வீதியில் இறங்கி போராட்டம் நடத்தி வருகின்றனர்.
அதேவேளை இராணுவ ஆட்சிக்கு எதிராக பல்வேறு கிளர்ச்சியாளர் குழுக்களும் உருவாகியுள்ளன. இந்த குழுக்களுக்கும், இராணுவத்திற்கும் இடையே அவ்வப்போது மோதல் நடைபெற்று வருகிறது.
இதனால் பலர் மியன்மாரை விட்டு வெளியேறி அண்டை நாடுகளில் தஞ்சம் அடைந்துள்ளனர்.
இந்நிலையில், மியன்மார் இராணுவத்திற்கும் கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே நேற்று(12) திடீரென துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. இந்த மோதலில் 20 பேர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் பலர் படுகாயமடைந்துள்ளனர்.
மியன்மாரில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற பொதுத்தேர்தலில் முறைகேடு நடைபெற்றதாக தெரிவித்து கடந்த பெப்ரவரி மாதம் முதலாம் திகதி ஆட்சியை கைப்பற்றிய இராணுவம், நாட்டின் தலைவர் ஆங் சான் சூகி உள்ளிட்ட முக்கிய தலைவர்களை கைது செய்து சிறை வைத்தது.
இதனை தொடர்ந்து இராணுவ ஆட்சிக்கு எதிராக அங்கு மாபெரும் போராட்டம் வெடித்தது. நாட்டில் ஜனநாயகத்தை மீட்டெடுக்க கோரியும், சிறை வைக்கப்பட்டுள்ள அரசியல் தலைவர்களை உடனடியாக விடுவிக்க வலியுறுத்தியும் பல்லாயிரக்கணக்கான மக்கள் வீதியில் இறங்கி போராட்டம் நடத்தி வருகின்றனர்.
அதேவேளை இராணுவ ஆட்சிக்கு எதிராக பல்வேறு கிளர்ச்சியாளர் குழுக்களும் உருவாகியுள்ளன. இந்த குழுக்களுக்கும், இராணுவத்திற்கும் இடையே அவ்வப்போது மோதல் நடைபெற்று வருகிறது.
இதனால் பலர் மியன்மாரை விட்டு வெளியேறி அண்டை நாடுகளில் தஞ்சம் அடைந்துள்ளனர்.
இந்நிலையில், மியன்மார் இராணுவத்திற்கும் கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே நேற்று(12) திடீரென துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. இந்த மோதலில் 20 பேர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் பலர் படுகாயமடைந்துள்ளனர்.