கல்விப் பொதுதராதர உயர்தரப் பரீட்சைகளுக்கு 2,922 விண்ணப்பங்கள் மாத்திரமே இதுவரை கிடைக்கப்பெற்றுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
அத்துடன், தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைகளுக்கான 6,589 விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் கல்வி அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.
உயர்தரப் பரீட்சை மற்றும் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கான விண்ணப்ப காலம் இன்றுடன் நிறைவடைகின்றது.
மேற்படி பரீட்சைகளுக்கான பாடசாலை மாணவர்களின் விண்ணங்கள் பாடசாலை அதிபர்கள் ஊடாக அனுப்பிவைக்கப்படுகின்றன.
எனினும், ஆசிரியர் - அதிபர்களின் தொழிற்சங்க போராட்டம் காரணமாக, மாணவர்களின் விண்ணப்பங்கள் தொடர்பில் நடவடிக்கையும் எடுக்காதிருக்க அத்தொழிற்சங்கம் தீர்மானித்திருந்தது.
இதனால், உயர்தரப் பரீட்சைகளுக்காக விண்ணப்பித்துள்ளவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைகளுக்கான 6,589 விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் கல்வி அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.
உயர்தரப் பரீட்சை மற்றும் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கான விண்ணப்ப காலம் இன்றுடன் நிறைவடைகின்றது.
மேற்படி பரீட்சைகளுக்கான பாடசாலை மாணவர்களின் விண்ணங்கள் பாடசாலை அதிபர்கள் ஊடாக அனுப்பிவைக்கப்படுகின்றன.
எனினும், ஆசிரியர் - அதிபர்களின் தொழிற்சங்க போராட்டம் காரணமாக, மாணவர்களின் விண்ணப்பங்கள் தொடர்பில் நடவடிக்கையும் எடுக்காதிருக்க அத்தொழிற்சங்கம் தீர்மானித்திருந்தது.
இதனால், உயர்தரப் பரீட்சைகளுக்காக விண்ணப்பித்துள்ளவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.