இலங்கை அணியின் பயண நேரத்தில் மாற்றம்

Monday, 04 October 2021 - 10:21

%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88+%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3+%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D
இருபதுக்கு 20 உலக கிண்ண தொடர் மற்றும் ஓமானுடனான கிரிக்கெட் தொடரில் பங்கேற்பதற்காகப் புறப்படவிருந்த இலங்கை குழாமின் பயணத்திற்கு தடையேற்பட்டுள்ளது.

சீரற்ற வானிலை காரணமாக இவ்வாறு தடையேற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரேபிய தீபக்கற்பத்தில் ஏற்பட்டுள்ள சூறாவளி காரணமாக ஓமானை நோக்கி நேற்றிரவு செல்லவிருந்த விமானத்தின் பயண நேரம் மாற்றியமைக்கப்பட்டது.

இந்தநிலையில், இலங்கை குழாம் ஓமானை நோக்கி இன்று மதியம் புறப்படவுள்ளதாக எமது விமான நிலைய செய்தியாளர் தெரிவித்தார்.