சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக இயக்குநர் ஷங்கரின் மருமகன் ரோகித் உட்பட 7 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழில் பல பிரம்மாண்ட படங்களை இயக்கியவர் ஷங்கர். இவரது மகளுக்கும் புதுச்சேரி கிரிக்கெட் அணியின் தலைவரும் மதுரை பாந்தர் கிரிக்கெட் அணியின் உரிமையாளரின் மகனுமான ரோகித் தாமோதரன் என்பவருக்கும் ஜூன் மாதம் திருமணம் நடைபெற்றது.
இந்நிலையில், ஷங்கரின் மருமகன் ரோகித் உட்பட 7 பேர்மீது போக்சோ பிரிவின் (பாலியல் வன்கொடுமைகளிலிருந்து சிறுவர்களை பாதுகாக்கும் சட்டம்) கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
புதுவையில் கிரிக்கெட் பயிற்சியின்போது, பயிற்சியாளர் தாமரைக்கண்ணன் 17 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாகப் பாதிக்கப்பட்ட சிறுமி கிரிக்கெட் சங்க நிர்வாகிகளிடம் முறைப்பாடு செய்துள்ளார்.
ஆனால் சங்க நிர்வாகிகள் பயிற்சியாளரிடம் மோதல் வேண்டாமெனக் கூறி அனுப்பி இருக்கின்றனர்.
இதனைத் தொடர்ந்து குறித்த சிறுமி, குழந்தைகள் நலக்குழுவிடம் முறைப்பாடு செய்துள்ளார்.
இது தொடர்பாகக் குழந்தைகள் நலக்குழுவினர் விசாரணை நடத்தி மேட்டுப்பாளையம் காவல்துறையிடம் முறைப்பாடு அளித்துள்ளனர்.
இதனையடுத்து பாலியல் சீண்டல் குற்றச்சாட்டில், பயிற்சியாளர் தாமரைக்கண்ணன், மற்றொரு பயிற்சியாளர் ஜெயக்குமார், கிரிக்கெட் சங்க தலைவர் தாமோதரன், செயலாளர் வெங்கட், கிரிக்கெட் அணி தலைவர் ரோகித் உட்பட 7 பேர்மீது போக்சோ பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழில் பல பிரம்மாண்ட படங்களை இயக்கியவர் ஷங்கர். இவரது மகளுக்கும் புதுச்சேரி கிரிக்கெட் அணியின் தலைவரும் மதுரை பாந்தர் கிரிக்கெட் அணியின் உரிமையாளரின் மகனுமான ரோகித் தாமோதரன் என்பவருக்கும் ஜூன் மாதம் திருமணம் நடைபெற்றது.
இந்நிலையில், ஷங்கரின் மருமகன் ரோகித் உட்பட 7 பேர்மீது போக்சோ பிரிவின் (பாலியல் வன்கொடுமைகளிலிருந்து சிறுவர்களை பாதுகாக்கும் சட்டம்) கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
புதுவையில் கிரிக்கெட் பயிற்சியின்போது, பயிற்சியாளர் தாமரைக்கண்ணன் 17 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாகப் பாதிக்கப்பட்ட சிறுமி கிரிக்கெட் சங்க நிர்வாகிகளிடம் முறைப்பாடு செய்துள்ளார்.
ஆனால் சங்க நிர்வாகிகள் பயிற்சியாளரிடம் மோதல் வேண்டாமெனக் கூறி அனுப்பி இருக்கின்றனர்.
இதனைத் தொடர்ந்து குறித்த சிறுமி, குழந்தைகள் நலக்குழுவிடம் முறைப்பாடு செய்துள்ளார்.
இது தொடர்பாகக் குழந்தைகள் நலக்குழுவினர் விசாரணை நடத்தி மேட்டுப்பாளையம் காவல்துறையிடம் முறைப்பாடு அளித்துள்ளனர்.
இதனையடுத்து பாலியல் சீண்டல் குற்றச்சாட்டில், பயிற்சியாளர் தாமரைக்கண்ணன், மற்றொரு பயிற்சியாளர் ஜெயக்குமார், கிரிக்கெட் சங்க தலைவர் தாமோதரன், செயலாளர் வெங்கட், கிரிக்கெட் அணி தலைவர் ரோகித் உட்பட 7 பேர்மீது போக்சோ பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.