UPDATE: நீாில் மூழ்கிய மகிழுந்து கண்டுபிடிப்பு: காணாமல்போன நபரும் சடலமாக மீட்பு!

Sunday, 28 November 2021 - 16:15

UPDATE%3A+%E0%AE%A8%E0%AF%80%E0%AE%BE%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%3A+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A9+%E0%AE%A8%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95+%E0%AE%AE%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%21
கண்டி - இலுக்மோதர பகுதியில் வேகக்கட்டுப்பாட்டை இழந்து  மகாவலி கங்கையில் வீழ்ந்து விபத்துக்குள்ளான மகிழுந்து மீட்கப்பட்டுள்ளதுடன், காணாமல் போயிருந்த நபரும் சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என்றும் காவல்துறை தெரிவித்துள்ளது.

விபத்து இடம்பெற்ற பகுதியில், காவல்துறையினருடன், இராணுவத்தினர்  இணைந்து முன்னெடுத்த தேடுதல் நடவடிக்கையின் பின்னர், குறித்த நபர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூன்று பேருடன் பயணித்த மகிழுந்து வேகக்கட்டுப்பாட்டை இழந்து கண்டி - இலுக்மோதர பிரதேசத்தில், மகாவலி கங்கையில் நேற்றிரவு 10.30 அளவில் வீழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதனையடுத்து அதில் பயணித்த இரண்டு பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், அவர்கள் தற்போது சிகிச்சைகளின் பின்னர் அங்கிருந்து வெளியேறியுள்ளனர்.

எனினும், விபத்துக்குள்ளான மகிழுந்தும், அதில் பயணித்த மற்றொரு நபரும் காணாமல்போயிருந்த நிலையில், தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.

இந்நிலையில், இன்று பிற்பகல் குறித்த நபர் சடலமாக மீட்கப்பட்டதுடன், விபத்துக்குள்ளான மகிழுந்தும் மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.