இலங்கை மற்றும் சுற்றுலா மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டியின் ஆரம்பம் மழையால் பாதிக்கப்பட்டிருந்தது.
இதனால் போட்டியை குறித்த நேரத்தில் தொடங்க முடியாமல் போயிருந்தது.
எனினும், காலி மைதானத்திலிருந்து கிடைத்த பிந்திய தகவல்களின்படி, சீரான வானிலை நிலவுவதால் பிற்பகல் 2.30 க்கு நாணய சுழற்சி இடம்பெறவுள்ளது.
அதன்படி இன்று பிற்பகல் 3.00 மணிக்கு போட்டி ஆரம்பமாகவுள்ளதுடன், பெரும்பாலும் 45 ஓவர்களை மட்டுமே வீச முடியும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இதேவேளை, இன்றைய போட்டியில் சரித் அசலங்க தமது முதலாவது டெஸ்ட் போட்டியில் இடம்பெறவுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.
இதனால் போட்டியை குறித்த நேரத்தில் தொடங்க முடியாமல் போயிருந்தது.
எனினும், காலி மைதானத்திலிருந்து கிடைத்த பிந்திய தகவல்களின்படி, சீரான வானிலை நிலவுவதால் பிற்பகல் 2.30 க்கு நாணய சுழற்சி இடம்பெறவுள்ளது.
அதன்படி இன்று பிற்பகல் 3.00 மணிக்கு போட்டி ஆரம்பமாகவுள்ளதுடன், பெரும்பாலும் 45 ஓவர்களை மட்டுமே வீச முடியும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இதேவேளை, இன்றைய போட்டியில் சரித் அசலங்க தமது முதலாவது டெஸ்ட் போட்டியில் இடம்பெறவுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.