வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகளின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணத்தில் இன்று(30) கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
யாழ்ப்பாணம் நாவலர் வீதியில் உள்ள ஏதிலிகளுக்கான ஐக்கிய நாடுகளின் உயர்ஸ்தானிகர் அலுவலகத்திற்கு முன்னால் இந்தப் போராட்டம் இன்று முற்பகல் 9.30 மணியளவில் ஆரம்பமானதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
இதன்போது, வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களுக்கு மரணச் சான்றிதழ் வேண்டாம், இழப்பீடு வேண்டாம், காணாமலாக்கப்பட்டோர் அலுவலகம் வேண்டாம், சர்வதேசமே உரிய தீர்வு வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோஷங்கள் எழுப்பப்பட்டன.
இந்தக் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்ட பகுதியில் காவல்துறையினர் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டிருந்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
யாழ்ப்பாணம் நாவலர் வீதியில் உள்ள ஏதிலிகளுக்கான ஐக்கிய நாடுகளின் உயர்ஸ்தானிகர் அலுவலகத்திற்கு முன்னால் இந்தப் போராட்டம் இன்று முற்பகல் 9.30 மணியளவில் ஆரம்பமானதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
இதன்போது, வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களுக்கு மரணச் சான்றிதழ் வேண்டாம், இழப்பீடு வேண்டாம், காணாமலாக்கப்பட்டோர் அலுவலகம் வேண்டாம், சர்வதேசமே உரிய தீர்வு வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோஷங்கள் எழுப்பப்பட்டன.
இந்தக் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்ட பகுதியில் காவல்துறையினர் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டிருந்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.