அரசியல் கட்சிகள் தங்களது தேர்தல் வாக்குறுதிகளில் மக்களுக்கு இலவசங்களை அறிவிப்பது தேர்தலின் நேர்மையை பாதிக்கும் தீவிரமான பிரச்சினையாகும் என டெல்லி உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
மக்களின் வரிப்பணத்தில் இருந்து இலவசங்களை அறிவிக்கும் அரசியல் கட்சிகளின் பதிவை இரத்துச் செய்வதற்கு, தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும் என டெல்லி உயர்நீதிமன்றில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இலவசங்களை அறிவிப்பது அரசியல் கட்சிகள் ஆட்சியை தக்கவைத்துக்கொள்ள வாக்காளர்களுக்கு கையூட்டல் கொடுப்பது போன்ற செயலாகும்.
எனவே, ஜனநாயக நடைமுறைகளை பாதுகாக்க, இதுபோன்ற நடைமுறைகள் தவிர்க்கப்பட வேண்டும் என்று அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அந்த மனு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, உயர்நீதிமன்றம் குறித்த விடயத்தைத் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக தேர்தல் ஆணையகம் பதிலளிக்க வேண்டும் என அறிவித்தல் அனுப்ப உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதாக இந்திய ஊடகமொன்று தெரிவித்துள்ளது.
மக்களின் வரிப்பணத்தில் இருந்து இலவசங்களை அறிவிக்கும் அரசியல் கட்சிகளின் பதிவை இரத்துச் செய்வதற்கு, தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும் என டெல்லி உயர்நீதிமன்றில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இலவசங்களை அறிவிப்பது அரசியல் கட்சிகள் ஆட்சியை தக்கவைத்துக்கொள்ள வாக்காளர்களுக்கு கையூட்டல் கொடுப்பது போன்ற செயலாகும்.
எனவே, ஜனநாயக நடைமுறைகளை பாதுகாக்க, இதுபோன்ற நடைமுறைகள் தவிர்க்கப்பட வேண்டும் என்று அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அந்த மனு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, உயர்நீதிமன்றம் குறித்த விடயத்தைத் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக தேர்தல் ஆணையகம் பதிலளிக்க வேண்டும் என அறிவித்தல் அனுப்ப உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதாக இந்திய ஊடகமொன்று தெரிவித்துள்ளது.