மேற்கிந்திய தீவுகள் அணிக்கெதிரான தொடரில் ரோஹித் சர்மா பங்கேற்பார்!

Wednesday, 26 January 2022 - 23:38

%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE+%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%21
மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான தொடரில் இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணித் தலைவர் ரோஹித் சர்மா பங்கேற்பார் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

இடது காலில் ஏற்பட்ட உபாதை காரணமாக தென் ஆபிரிக்க தொடரில் ரோஹித் சர்மாவுக்கு ஓய்வு வழங்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், அவர் தற்போது சிறந்த உடல்நிலையுடன் உள்ளதாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

மேற்கிந்திய தீவுகள் மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் தொடர் எதிர்வரும் 6ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

குறித்த தொடரில் இந்திய அணியின் சகலத்துறை ஆட்டக்காரர் ஹார்த்திக் பாண்டியாவும் இணைத்துக்கொள்ளப்படுவார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.