அவசர கால சட்டம் நீடிக்கப்படாது- ரணிலின் அறிவிப்பு!

Tuesday, 16 August 2022 - 20:57

%E0%AE%85%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%B0+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2+%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%A8%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81-+%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%21
இலங்கையில் எதிர்வரும் 18ஆம் திகதி காலாவதியாகும் அவசரகாலச் சட்டம், நீடிக்கப்பட மாட்டாது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

நாட்டின் நிலைமை வழமைக்குத் திரும்பியுள்ளதால், அவசரகாலச் சட்டம் நீடிக்கப்படமாட்டாது என்று அவர் இன்று குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வந்த ஆர்ப்பாட்டங்களுக்கு மத்தியில் கொண்டு வரப்பட்ட அவசர கால சட்டத்தை நீக்குமாறு உள்நாட்டிலும் மற்றும் வெளிநாடுகளிலும் தொடர்ந்தும் இலங்கை அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டு வந்தன.