முதலீடு மற்றும் வேலை வாய்ப்புகள் உள்ளிட்டவை ஊடாக சவூதி அரேபியாவுடனான உறவை மேம்படுத்துவதற்கு இலங்கை முயற்சிப்பதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
சவூதி அரேபியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள அமைச்சர் அலி சப்ரி, அராப் நியூஸூக்கு வழங்கிய விசேட செவ்வியில் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
நேற்றைய தினம் சவூதி அரேபியா நோக்கி பயணித்த அவர், எதிர்வரும் 27ஆம் திகதி வரை அங்கு தங்கியிருப்பார்.
இதன்போது அவர், சவூதி அரேபிய வெளிவிவகார அமைச்சர் உள்ளிட்ட பிரதிநிதிகளை சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.
இந்தநிலையில் வேலை வாய்ப்புகள் மற்றும் முதலீட்டை பெறுவதற்கான தற்போதைய கலந்துரையாடல்களை மேலும் வலுப்படுத்துவதற்காகவே தாம் சவுதி அரேபியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ளதாகவும் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
பாரம்பரியமாக இலங்கை சவுதி அரேபியாவுடன் நல்ல உறவை கொண்டுள்ளது.
எனவே அதை வலுப்படுத்த முடியும் என்றும் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
சவூதி அரேபியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள அமைச்சர் அலி சப்ரி, அராப் நியூஸூக்கு வழங்கிய விசேட செவ்வியில் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
நேற்றைய தினம் சவூதி அரேபியா நோக்கி பயணித்த அவர், எதிர்வரும் 27ஆம் திகதி வரை அங்கு தங்கியிருப்பார்.
இதன்போது அவர், சவூதி அரேபிய வெளிவிவகார அமைச்சர் உள்ளிட்ட பிரதிநிதிகளை சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.
இந்தநிலையில் வேலை வாய்ப்புகள் மற்றும் முதலீட்டை பெறுவதற்கான தற்போதைய கலந்துரையாடல்களை மேலும் வலுப்படுத்துவதற்காகவே தாம் சவுதி அரேபியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ளதாகவும் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
பாரம்பரியமாக இலங்கை சவுதி அரேபியாவுடன் நல்ல உறவை கொண்டுள்ளது.
எனவே அதை வலுப்படுத்த முடியும் என்றும் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.