சவேந்திர சில்வாவின் விஜயத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நாவற்குழியில் போராட்டம்!

Saturday, 18 March 2023 - 20:42

%E0%AE%9A%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0+%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81+%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D%21
படைகளின் தலைமையதிகாரி சவேந்திர சில்வாவின் நாவற்குழியில் பௌத்த விகாரைக்கான விஜயத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்றைய தினம் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

குறித்த கவனயீர்ப்பு போராட்டம் நாவற்குழி விகாரைக்கு செல்லும் பிரதான பாதையில் முன்னெடுக்கப்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் - நாவற்குழி ஸ்ரீ சமித்தீ சுமன' விகாரைக்கு கலசம் வைக்கும் நிகழ்வு கங்வெல்ல ரத்னசிறி தேரர் தலைமையில் இன்று இடம்பெற்றது.

இந்தநிலையில், படைகளின் தலைமையதிகாரி சவேந்திர சில்வாவின் வருகை உள்ளிட்ட செயற்பாடுகளுக்கு எதிராக தமிழ் தேசிய மக்கள் முன்னணின் ஏற்பாட்டில் குறித்த கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன், உள்ளிட்ட பலரும் கலந்துக்கொண்டிருந்தனர்.