நுவரெலியா, லபுக்கலை பகுதியில் கடந்த 5 ஆம் திகதி இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்த நிலையில், நுவரெலியா வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்றுவந்த குடும்பஸ்தர் ஒருவர் சிகிச்சை பலனின்றி இன்று (21) உயிரிழந்துள்ளார்.
நுவரெலியா, கந்தப்பளை, ஐபோரஸ்ட் பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம் திருச்செல்வம் (45) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இவர் மூன்று பிள்ளைகளின் தந்தை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்துக்கு மரக்கறி ஏற்றிச்சென்ற பாரவூர்தியொன்று கடந்த 5 ஆம் திகதி லபுக்கலை பகுதியில் வைத்து பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதில் 14 பேர் காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.