உலக அளவில் அதிக முக்கியத்துவம் வாய்ந்த வெளிநாட்டு கட்சியாக, பாரதீய ஜனதா கட்சி விளங்குவதாக அமெரிக்காவின் வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் சஞ்சிகை தெரிவித்துள்ளது.
இதன்படி, இந்தியாவில் ஆளுங்கட்சியாக உள்ள பாரதீய ஜனதா கட்சி, உலக அளவில் மிக முக்கியம் வாய்ந்த கட்சியாக உள்ளது.
2014, 2019 ஆகிய ஆண்டுகளில் தொடர் வெற்றி பெற்ற பாரதீய ஜனதா கட்சி, அடுத்து 2024-ம் ஆண்டு தேர்தலிலும் வெற்றியை திரும்ப பெறும் முனைப்பில் உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு முன்னணி பொருளாதார சக்தி படைத்த நாடாக இந்தியா வெளிப்பட்டு வருகிறது.
இந்தநிலையில், வளர்ந்து வரும் சீனாவின் ஆற்றலை சமன்படுத்தும் வகையிலான அமெரிக்காவின் முயற்சிகளுக்கு, பாரதீய ஜனதா கட்சியின் உதவியின்றி செயல்படுவது பலன் தராது வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் குறிப்பிட்டுள்ளது.