நடிகர் அஜித் குமாரின் தந்தை சுப்பிரமணியம் கடந்த 24ஆம் திகதி அதிகாலை உடல் நலக்குறைவால் காலமானார்.
சில ஆண்டுகளாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவர், கடந்த 24ஆம் திகதி அதிகாலை 3:15 மணியளவில் காலமானார்.
இவரது மறைவுக்கு திரையுலக பிரபலங்கள் ரசிகர்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வந்தனர்.
இந்தநிலையில், நடிகர் அஜித் குமாரின் வீட்டுக்கு நடிகர் சூர்யா மற்றும் கார்த்தி நேரில் சென்று இரங்கல் தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சென்னை - ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள அஜித் குமாரின் வீட்டுக்கு சென்றே சூர்யா மற்றும் கார்த்தி இரங்கல் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, நடிகர் அஜித் குமாரின் வீட்டுக்கு நடிகர் விஜய் நேரில் சென்று இரங்கல் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
சில ஆண்டுகளாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவர், கடந்த 24ஆம் திகதி அதிகாலை 3:15 மணியளவில் காலமானார்.
இவரது மறைவுக்கு திரையுலக பிரபலங்கள் ரசிகர்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வந்தனர்.
இந்தநிலையில், நடிகர் அஜித் குமாரின் வீட்டுக்கு நடிகர் சூர்யா மற்றும் கார்த்தி நேரில் சென்று இரங்கல் தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சென்னை - ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள அஜித் குமாரின் வீட்டுக்கு சென்றே சூர்யா மற்றும் கார்த்தி இரங்கல் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, நடிகர் அஜித் குமாரின் வீட்டுக்கு நடிகர் விஜய் நேரில் சென்று இரங்கல் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.