கொடிகாமம் - மிருசுவில் சிற்றூர்ந்து விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

Monday, 27 March 2023 - 14:18

%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D+-+%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81
கொடிகாமம் - மிருசுவில் பகுதியில் இன்று அதிகாலை, சிற்றூர்ந்து ஒன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்தார்.

விபத்தில் காயமடைந்த நிலையில் சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதித்தப் பின்னர் அவர் உயிரிழந்தாக காவல்துறை ஊடகபேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

உயிரிழந்தவர் பரந்தன் பகுதியைச் சேர்ந்த 27 வயதுடையவராவார்.

விபத்து நேர்ந்த சந்தர்ப்பத்தில் சிற்றூர்ந்தில் சாரதி மாத்திரம் இருந்துள்ளதாக காவல்துறை ஊடகபேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.