இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் இன்றைய போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி 34 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.
போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற சன்ரைசர்சஸ் ஐதராபாத் முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.
இதற்கமைய, முதலில் துடுப்பாடிய குஜராத் டைட்டன்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 09 விக்கெட்டுக்களை இழந்து 188 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
இந்தநிலையில், 189 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பாடிய சன்ரைசர்சஸ் ஐதராபாத் அணி 20 ஓவர்கள் நிறைவில் 09 விக்கெட்டுக்களை இழந்து 154 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியை தழுவியது.
இதேவேளை, இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் அதிக முறை டக் அவுட் (ஓட்டங்கள் எதனையும் பெறாமல்)ஆன வீரர்கள் பட்டியலில் ரோஹித் சர்மாவுடன் தினேஷ் கார்த்திக் இணைந்துள்ளார்.
இவர்கள் இருவரும் இதுவரை16 முறை ஓட்டங்கள் எதனையும் பெறாமல் ஆட்டமிழந்து சென்றுள்ளனர்.
அத்துடன், மந்தீப் சிங், சுனில் நரேன் ஆகியோர் 15 முறை ஓட்டங்கள் எதனையும் பெறாமல் ஆட்டமிழந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற சன்ரைசர்சஸ் ஐதராபாத் முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.
இதற்கமைய, முதலில் துடுப்பாடிய குஜராத் டைட்டன்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 09 விக்கெட்டுக்களை இழந்து 188 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
இந்தநிலையில், 189 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பாடிய சன்ரைசர்சஸ் ஐதராபாத் அணி 20 ஓவர்கள் நிறைவில் 09 விக்கெட்டுக்களை இழந்து 154 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியை தழுவியது.
இதேவேளை, இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் அதிக முறை டக் அவுட் (ஓட்டங்கள் எதனையும் பெறாமல்)ஆன வீரர்கள் பட்டியலில் ரோஹித் சர்மாவுடன் தினேஷ் கார்த்திக் இணைந்துள்ளார்.
இவர்கள் இருவரும் இதுவரை16 முறை ஓட்டங்கள் எதனையும் பெறாமல் ஆட்டமிழந்து சென்றுள்ளனர்.
அத்துடன், மந்தீப் சிங், சுனில் நரேன் ஆகியோர் 15 முறை ஓட்டங்கள் எதனையும் பெறாமல் ஆட்டமிழந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.