2021 - 2023ஆம் ஆண்டுகளுக்கான, டெஸ்ட் செம்பியன்ஷிப் தொடருக்கான பரிசுத் தொகையை, சர்வதேச கிரிக்கெட் பேரவை அறிவித்துள்ளது.
9 அணிகளுக்கான, மொத்த பரிசுத் தொகை 3.8 மில்லியன் டொலராகும்.
இந்திய மற்றும் அவுஸ்திரேலிய அணிகள் மோதும், இறுதிப் போட்டி அடுத்த மாதம் 7ஆம் திகதி லண்டனில் ஆரம்பமாகவுள்ளது.
இறுதிப் போட்டியில், வெற்றிபெறும் அணிக்கு 1.6 மில்லியன் டொலரும், இரண்டாம் இடத்தைப் பிடிக்கும் அணிக்கு 8 இலட்சம் டொலரும் பரிசாக வழங்கப்படவுள்ளது.
டெஸ்ட் செம்பியன்ஷிப் பட்டியலில், மூன்றாம் இடத்தைப் பிடித்த தென்னாபிரிக்க அணிக்கு 4 இலட்சத்து 50 ஆயிரம் டொலரும்,
நான்காம் இடத்தில் உள்ள இங்கிலாந்து அணிக்கு, 3 இலட்சத்து 50 ஆயிரம் டொலரும்,
5ஆம் இடத்தில் உள்ள இலங்கை அணிக்கு, 2 இலட்சம் டொலரும் வழங்கப்படவுள்ளது.
குறித்த பட்டியலில், ஏனைய இடங்களைப் பிடித்துள்ள நியூஸிலாந்து, பாகிஸ்தான், மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு, தலா ஒரு இலட்சம் டொலர் பரிசுத்தொகை வழங்கப்பட உள்ளதாக, சர்வதேச கிரிக்கெட் பேரவை அறிவித்துள்ளது.
9 அணிகளுக்கான, மொத்த பரிசுத் தொகை 3.8 மில்லியன் டொலராகும்.
இந்திய மற்றும் அவுஸ்திரேலிய அணிகள் மோதும், இறுதிப் போட்டி அடுத்த மாதம் 7ஆம் திகதி லண்டனில் ஆரம்பமாகவுள்ளது.
இறுதிப் போட்டியில், வெற்றிபெறும் அணிக்கு 1.6 மில்லியன் டொலரும், இரண்டாம் இடத்தைப் பிடிக்கும் அணிக்கு 8 இலட்சம் டொலரும் பரிசாக வழங்கப்படவுள்ளது.
டெஸ்ட் செம்பியன்ஷிப் பட்டியலில், மூன்றாம் இடத்தைப் பிடித்த தென்னாபிரிக்க அணிக்கு 4 இலட்சத்து 50 ஆயிரம் டொலரும்,
நான்காம் இடத்தில் உள்ள இங்கிலாந்து அணிக்கு, 3 இலட்சத்து 50 ஆயிரம் டொலரும்,
5ஆம் இடத்தில் உள்ள இலங்கை அணிக்கு, 2 இலட்சம் டொலரும் வழங்கப்படவுள்ளது.
குறித்த பட்டியலில், ஏனைய இடங்களைப் பிடித்துள்ள நியூஸிலாந்து, பாகிஸ்தான், மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு, தலா ஒரு இலட்சம் டொலர் பரிசுத்தொகை வழங்கப்பட உள்ளதாக, சர்வதேச கிரிக்கெட் பேரவை அறிவித்துள்ளது.