11 வயது மகள் துஷ்பிரயோகம்: தந்தைக்கு 110 வருட கடூழிய சிறைத்தண்டனை

Tuesday, 06 June 2023 - 9:10

11+%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%3A+%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+110+%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F+%E0%AE%95%E0%AE%9F%E0%AF%82%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%88+
தனது 11 வயது மகளை கடுமையாக பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய தந்தைக்கு 110  (நூற்றிபத்து) வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்து பலப்பிட்டிய மேல் நீதிமன்றம் நேற்று (05) தீர்ப்பளித்துள்ளது.

அத்துடன், 6 இலட்சம் ரூபா நட்டஈடும், 8 000 ரூபா அபராதமும் விதித்தும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

சந்தேகநபரான தந்தை 2008 ஆம் ஆண்டு ஜனவரி முதலாம் திகதி முதல் பல சந்தர்ப்பங்களில் தனது மகளை கடுமையாக பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளார் என ஊரகஸ்மங்ஹந்திய காவல்துறையினர் இந்த வழக்கை தாக்கல் செய்திருந்தனர்.

சிறுமியின் தாய் வெளிநாட்டில் இருந்தபோது, ​​தனது தந்தை மதுபோதையில் வந்து தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக அயலவர் ஒருவரிடம் சிறுமி கூறியுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் முறைப்பாடு செய்ததையடுத்து சந்தேகநபரின் தந்தை கைது செய்யப்பட்டு பலப்பிட்டிய நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதுடன், அவருக்கு எதிராக குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டது.