சீனாவின் ஹூனான் மாகாணத்தின் பிரதி ஆளுநர் கு கேங் தலைமையிலான சீன தூதுக் குழுவினர், இலங்கையின் தேயிலைத் தொழிலின் தன்மையை அவதானிப்பதற்கான விஜயமொன்றை மேற்கொண்டுள்ளனர்.
காலி – பிட்டிகல பகுதியில் உள்ள தேயிலை தொழிற்சாலை ஒன்றை அவதானித்த அவர்கள், இலங்கையில் தேயிலை கைத்தொழிலை மேம்படுத்துவதற்கு தேவையான ஆதரவை வழங்க தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளனர்.