ஹமாஸ் அமைப்பின் முக்கிய தலைவரான இஸ்மாயில் ஹனியே (Ismail Haniyeh) ஈரானில் வைத்துக் கொல்லப்பட்டுள்ளார்.
தெஹ்ரானில் உள்ள அவரது இல்லத்தில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் அவர் கொல்லப்பட்டதாக ஹமாஸ் அமைப்பு விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரானின் புதிய ஜனாதிபதியாக மசூட் பெஷெஸ்கியான் நேற்று பதவியேற்றுக் கொண்டார்.
இந்த நிகழ்வில் பங்கேற்றிருந்த இஸ்மாயில் ஹனியே, இன்று அதிகாலை கொல்லப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.