லெபனானுக்கு செல்ல வேண்டாம்!

Friday, 02 August 2024 - 11:10

%E0%AE%B2%E0%AF%86%E0%AE%AA%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2+%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%21
மத்திய கிழக்கில் தற்போது நிலவும் பதற்றமான சூழ்நிலை காரணமாக அத்தியாவசிய தேவைகளைத் தவிர லெபனானுக்கு செல்வதனைத் தவிர்க்குமாறு இலங்கையர்களுக்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி இந்த அறிவுறுத்தலை விடுத்துள்ளார்.

இதேவேளை மத்திய கிழக்கில் நிலவும் பதற்றநிலை தொடர்ந்தால் அதனை எதிர்கொள்வது தொடர்பில் முன்கூட்டிய தயார் நிலைக்காக 3 விசேட குழுக்களை நியமிக்க ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எடுத்த தீர்மானம், மிகவும் சரியானதாகும் என வெளிவிகார அமைச்சர் அலி சப்ரி குறிப்பிட்டுள்ளார்.