இந்திய மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டியிலும் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றுள்ளது.
நேற்றைய போட்டியில் முதலில் துடுப்பாடிய பாகிஸ்தான் அணி 48.3 ஓவர்களில் 250 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.
பதிலளித்து துடுப்பாடிய இந்திய அணி, 48 ஓவர்களில் 165 ஓட்டங்களை பெற்ற நிலையில் அனைத்து விக்கட்டுகளையும் இழந்தது.
இந்தியா சார்பாக அணித்தலைவர் மகேந்திரசிங் தோனி ஆட்டமிழக்காமல் 54 ஓட்டங்களைப் பெற்றிருந்தார்.