தந்தையின் தாக்குதலுக்கு உள்ளான ஒன்றரை வயதான சிசுவொன்று பலியானது.
இந்த சம்பவம், பிலியந்தலை மோராத பிரதேசத்தில் இடம்பெற்றது.
தாக்குதலுடன் தொடர்புடைய சந்தேகத்திற்கு உரிய தந்தை, தற்சமயம் அந்த பிரதேசத்தில் இருந்து தலைமறைவாகியுள்ளதாக எமது செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்வதற்காக பிலியந்தலை காவல்துறை நிலையத்தின் அதிகாரிகள் குழுவொன்று அங்கு சென்றுள்ளது.
பலியான சிசுவின் சடலம் பிலியந்தலை மருத்துவ மனையில், வைக்கப்பட்டுள்ளது.