கிளர்ச்சியாளர்களை எதிர்கொள்ள தயார் என சிரியா ஜனாதிபதி ஊடகம் ஒன்றுக்கு அளித்துள்ள செவ்வியில் குறிப்பிட்டுள்ளார்.
சிரியாவில் கடந்த 21 ஆண்டுகளாக அந்த நாட்டு ஜனாதிபதி பசர் அல்அசாத்திற்கு எதிராக மக்கள் கிளர்ச்சியில் ஈடுப்பட்டு வருகின்றனர்.
கிளர்ச்சியாளர்களுக்கு அமெரிக்க உதவி செய்து வருகிறது.
இதுவரை இடம்பெற்ற மோதல்களில் 60 ஆயிரம் பேர் கொல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில், முதன்முதலாக அந்த நாட்டு ஜனாதிபதி பசர் அல்அசாத், தலைநகர் டமாஸ்கஸில் உள்ள ரஷ்ய நாட்டு தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்தார்.
இதன்போது அவர் கிளர்ச்சியாளர்களை எதிர்கொள்ள தாம் தயார் எனவும், இவர்கள் அல்கொய்தா அமைப்பினரை போன்று செயல்படுகின்றனர் என்றும் தெரிவித்துள்ளார்.
நாட்டினையும், நாட்டு மக்களையும் காப்பாற்ற, தேசம் எல்லா நிலைகளிலும் தயாராக உள்ளது.
மக்களை காப்பாற்ற வேண்டிய கடமை உள்ளதாகவும் பசர் அல்அசாத் குறிப்பிட்டுள்ளார்.