சமூக வலைத்தளத்தின் ஊடாக அவதூறு பரப்பிய குற்றத்தின் பேரில் பத்திரிகையாளர் ஒருவர் குவைத்தில் சிறை வைக்கப்பட்டார்.
வளைகுடா நாடான குவைத் நாட்டில் சமூக வலைதளங்களுக்கு சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் அயாத் அல்-ஹர்பி என்ற குறித்த பத்திரிகையாளர் சமூக வலைதளத்தின் ஊடாக, குவைத் மன்னராட்சி பற்றியும், மேற்குல நாடுகளுடன் அவர்கள் ஏற்படுத்தியுள்ள நட்புறவு தொடர்பிலும் அவதூறு பரப்பியாக குற்றம்சாட்டப்பட்டது.
இந்த நிலையில் கைது செய்யப்பட்ட அவருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
குவைட்டில், பத்திரிகையாளர் ஒருவருக்கு இவ்வாறு சிறை தண்டனை விதிக்கப்படுவது இது இரண்டாவது முறை என்பது குறிப்பிடத்தக்கது.