பிரதம நீதியரசர் பதவி விலக்கல்

Sunday, 13 January 2013 - 14:31

%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE+%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D+


பிரதம நீதியரசர் சிரானி பண்டாரநாயக்கவை பதவி நீக்குவதற்கான அதிகார ஆவனத்தில் ஜனாதிபதி கைச்சாத்திட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஜனாதிபதியின் பேச்சாளர் மொஹான் சமரநாயக்க இதனைத் தெரிவித்துள்ளார்.
இதன்படி பிரதம நீதியரசர் சிரானி பண்டாரநாயக்க அவரது பதவியில் இருந்துநீக்கப்படுவது உறுதி என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில் நேற்றைய தினம் ஜனாதிபதி மகிந்தராஜபக்ஷ ஏனைய உயர்நீதிமன்ற நீதியரசர்களுடன் சந்திப்பு ஒன்றை நடத்தியுள்ளார்.
அத்துடன் இன்றைய தினம் சட்டத்தரணிகள் சங்கங்களின் பிரதிநிதிகளையும் அவர் சந்திக்கவிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.