இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கட் போட்டி நாளைய தினம் நடைபெறவுள்ளது.
இந்த போட்டி இந்தியாவின் கொச்சி விளையாட்டு மைதானத்தில் நடைபெறவுள்ளது.
ஏற்கனவே நடைபெற்று முடிந்த இந்த தொடரின் முதலாவது போட்டியில் இங்கிலாந்து அணி 9 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.
இதற்கிடையில் இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டி எதிர்வரும் 18ம் திகதி நடைபெறவுள்ளது.
இந்த தொடரில் இரண்டு போட்டிகள் நிறைவடைந்துள்ள நிலையில், இரண்டு அணிகளும் தலா ஒவ்வொரு போட்டிகளில் வெற்றிப் பெற்றுள்ளன.